அடிலெய்ட் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டியுடன் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்கவுள்ளது.
இதையொட்டி இரு அணிகளும் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஸ்டீவ் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக இடையிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் முதுகில் வலி இருந்தபோதிலும், ஸ்டீவ் ஸ்மித் பிட்டாக இருப்பதாகவும் நாளைய போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நாளைய தினம் அடிலெய்டில் துவங்கவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக இரு அணிகளும் பயிற்சிகளில் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் வார்ம்-அப் பயிற்சியில் ஈடுபட்டபோது முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
இந்நிலையில் முதுகில் வலி இருந்தாலும் ஸ்மித் நாளைய போட்டியில் கண்டிப்பாக பங்கேற்று தன்னுடைய வழக்கமான முத்திரையை பதிப்பார் என்று கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். பகலிரவு போட்டிக்காக ஸ்மித் சிறப்பாக தயாராகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.