
கோபம்
நான் 94 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி இருக்கிறேன். இதில் பலமுறை நான் ஆட்டம் இழந்தவுடன் ஏன் இந்த தவறு செய்தோம் என்று யோசித்ததே கிடையாது. ஆனால் டெல்லி டெஸ்டில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தவுடன் எனக்கு என் மீது கோபம் வந்தது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான ஷாட் ஆடி ஆட்டம் இழந்தது குறித்து நான் என்றும் யோசித்ததே கிடையாது.
டெல்லியில் நடந்தது நிச்சயமாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் நல்ல தருணம் கிடையாது.

பொறுமை வேண்டும்
நான் எதிர்பார்த்தது போல் டெல்லி டெஸ்டில் விளையாடவில்லை. இந்திய வீரர்கள் ரன் அடிக்க எதுவாக தான் பில்டர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் தான் வேகமாக விளையாடி விக்கெட்டுகளை இழந்து விட்டோம். டெல்லி டெஸ்டில் நாங்கள்தான் முன்னிலையில் இருந்தோம். எங்கள் கையே ஓங்கி இருந்தது. அந்த தருணத்தில் தேவையில்லாமல் அதிரடியாக விளையாடி பெரிய ரிஸ்குகளை எடுத்து தோல்வியை தழுவி விட்டோம். அந்த தருணத்தில் கொஞ்சம் பொறுமை காத்து விளையாடி இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கடினமாக இருக்கிறது
இது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். ரன் அடிக்க வாய்ப்பு இருந்தால் சிங்கிள் எடுத்து மறுமுனைக்கு செல்ல வேண்டும். இது இந்திய பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் வகையில் விளையாட வேண்டும். நாம் நெருக்கடியில் இருந்தால் ஆட்டத்தின் போக்கை துரிதப்படுத்தக் கூடாது. வேகமாக ஆடுகிறேன் என்று ஆட்டம் இழந்து விட்டால் அடுத்து விளையாடும் வீரர்களுக்கு இந்த சூழலை கையாள்வது மிகவும் கடினமாக மாறிவிடுகிறது. இந்தியாவில் இன்னிசை தொடங்குவது தான் கடினம்.

யாரும் இல்லை
ஒரு முப்பது பந்துகளை நீங்கள் விளையாடி விட்டால் அதன் பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன் சேர்த்து விடலாம். ஏதேனும் ஒரு பந்தில் ஆட்டம் இழந்து விடுவோம் என்ற நினைப்பு நமது மனதில் இருக்கக் கூடாது. நான் முதல் டெஸ்டில் 30 ரன்கள் எடுத்தேன். மார்னஸ் நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால் எங்களால் இதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தாலே ஆட்டத்தின் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் இரண்டு இன்னிங்ஸிலும் நன்றாகவே விளையாடினார். ஆனால் அவருக்கு துணையாக யாருமே விளையாடவில்லை.

இரண்டாவது வீடு
யாரேனும் ஒருவர் அவருடன் ஆதரவாக விளையாடினால், முதல் இன்னிங்சில் நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் ரன் எடுத்திருப்போம். கேப்டனாக செயல்படும்போது நான் இன்னும் சிறப்பாகவே விளையாடி இருக்கிறேன். இந்தியா எனக்கு இரண்டாவது வீடு போன்றது. இங்கு நான் நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன். இந்திய ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். மூன்றாவது டெஸ்டில் உள்ள சவாலை கேப்டனாக எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.


Click it and Unblock the Notifications











