கிளை போட்டிகள்
இந்த மூன்று வீரர்களும் இப்போது கிளப் போட்டிகள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எந்த விதமான முதல்தர போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல் ஐபிஎல், பிசிஎல், பிக்பாஷ் போன்ற போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.
பிரச்சனை ஆகும்
இதில் ஸ்மித், வார்னர் ஆகிய வீரர்கள் மிகவும் அனுபவம் மிக்க வீரர்கள் என்றாலும், அவர்கள் மீண்டும் அணிக்கும் திரும்புவது கடினம். 1 வருட தடை முடிந்தாலும், சில முதல் தர போட்டிகள் விளையாட தங்களது பிட்னஸ், பார்மை நிரூபிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணி இளம் வீரர்களை எடுக்கும் முனைப்பில் இருப்பதால், ஸ்மித் வந்தாலும், வார்னர் வருவது கடினமான விஷயம் ஆகும்.
|
ஸ்மித் தந்தை
இந்த நிலையில் ஸ்மித் வீட்டில் அவரது கிரிக்கெட் உபகரணங்களை அவரது தந்தை மறைத்து வைத்துள்ளார். ஸ்மித் பார்த்தால் எப்போதும் அதை பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பார் என்று இப்படி செய்துள்ளார். சில நாட்கள் கிரிக்கெட் குறித்து எதுவும் ஸ்மித் சிந்திக்க கூடாது என்று முடிவெடுத்து இருப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
|
மன்னிக்க வேண்டும்
இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இதற்கு பலரும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இவர் ''இது தவறு என்று தெரியும். ஆனாலும் ஸ்மித் மன்னிக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.