
திணறல்
இரண்டு நாட்களாக இந்திய வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள். 170 ஓவர்களை இந்திய வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாக வீசினார்கள். இதனால் இந்திய வீரர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

உளைச்சல்
இப்படிப்பட்ட நிலையில் இன்று பட்லர் விக்கெட் விழுந்த போதும் அதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. 165 ஓவரில் சுந்தர் வீசிய 4வது பந்தில் பட்லர் இன்சைட் எட்ஜாகி கேட்ச் கொடுத்தார். இதை பண்ட் பிடித்துவிட்டு விக்கெட் கேட்டார்.

விக்கெட்
ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதையடுத்து ரோஹித் சர்மாவும் கத்தியபடி விக்கெட் என்று கேட்டார். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் சுந்தர் தலையில் கைவைத்தபடி அப்படியே உட்கார்ந்து இருந்தார்.

விழுந்த விக்கெட்
விழுந்த விக்கெட்டை இப்படி கொடுக்காமல் போய் விட்டார்களே என்று சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். அதோடு இந்திய அணியிடம் ரிவ்யூவும் மிச்சம் இல்லை. இதனால் அதற்கு ரிவ்யூவும் கேட்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications