
குதிரை மாதிரி
இலங்கை பேட்டிங் செய்யும் போது, பும்ரா 4 ஓவர்களாகவும், முகமது ஷமிதொடர்ந்து ஓவர்கள் வீசியும் கடும் நெருக்கடி அளித்தனர். இது தொடர்பாக பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், முகமது ஷமி ஒரு குதிரை மாதிரி. குதிரை எப்படி வேலை செய்யுமோ அதே மாதிரி தான். ஒவ்வொரு பந்தையும் முழு வேகத்துடன் வீசுவார். எவ்வளவு நேரம் பந்துவீசினாலும், அவரது வேகம் குறையாது.

வேகம் குறையாது
ஒரு சிலர் 4 ஓவர் மட்டும் தான் தொடர்ந்து வீச முடியும். அதன் பிறகு அவர்களுக்கு Tired ஆகி விடும். ஆனால் முகமது ஷமி முதல் ஓவர் வீசுவது போல் 6 அல்லது 7 ஓவர்களை தொடர்ந்து வீச முடியும். ஒவ்வொரு பந்து மூலம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை முகமது ஷமி ஏற்படுத்தி வருகிறார்.

டாப் கிளாஸ்
இது போன்ற தகுதிகள் உடைய பந்துவீச்சாளர்கள் உங்களுக்கு முக்கியம். ஆனால் ஒரு சிலர் வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதையே மறந்து விடுகின்றனர். இந்தியாவின் வேகப்பந்துவீச்சு டாப் கிளாசாக உள்ளது. முகமது ஷமி, பும்ரா ஆகியோர் புதிய பந்தை சிறப்பாக கையாளக் கூடியவர்கள்

நல்ல காலம்
3வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் உள்ளார். அவரும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். இது தவிர உமேஷ் யாதவ் இருக்கிறார். இதனால் இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடிய இஷாந்த் சர்மாவுக்கு கூட தற்போது வாய்பபு கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இது உண்மையிலேயே சிறந்த காலங்கள்.


Click it and Unblock the Notifications