
3 வாரம் பயிற்சி
இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய சுனில் கவாஸ்கர் இம்முறை எங்களை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு அமையவில்லை என்ற காரணத்தை இந்திய அணி சொல்லவே முடியாது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பாகவே இந்திய அணி வந்து பயிற்சி செய்து வந்துள்ளனர்.மேலும் பயிற்சி ஆட்டத்தில் நல்ல பலமான அணிகளை எதிர்கொண்டு தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளனர்.

சிறப்பான தயாரிப்பு பணி
அந்த காலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். எதற்காகவும் உன்னை நீ தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றால் தோல்வி அடைய உன்னை தயார்படுத்திக் கொள் என்று சொல்வார்கள். ஆனால் இம்முறை இந்த பழமொழி இந்திய அணிக்கு ஒத்து வராது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆறு டி20 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளை வென்றிருக்கிறது.

ஐசிசி தொடரில் சொதப்பல்
இந்திய அணி இருதரப்பு தொடர்களில் எல்லாம் சிறப்பாக செயல்படுகிறது. அது சொந்த மண்ணில் நடந்தாலும் சரி அந்நிய மண்ணில் நடந்தாலும் சரி.ஆனால் ஐசிசி போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதற்கு காரணம் அப்போது போதிய பயிற்சி இல்லாமல் இந்திய அணி வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால் இம்முறை அப்படி அல்ல.

இந்தியா மீது எதிர்பார்ப்பு
இந்திய அணியில் அனுபவமும் இளமையும் வாய்ந்த வீரர்கள் கலந்த கலவையாக இருக்கிறார்கள். இம்முறை உலகக் கோப்பை இந்தியாவுக்கு திரும்பி வரும் என ரசிகர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. பும்ரா, ஜடேஜா ஆகியோர் இல்லாத நிலையிலும் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications