
கவாஸ்கர் அறிவுரை
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ராகுல் பேட்டிங்கில் குறை இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அதில் ராகுல் பேட்டிங் செய்யும்போது முன்னால் வந்து ஆடுவதா இல்லை பின்னால் நின்று ஆடுவதா என்று குழப்பத்தில் இருக்கிறார். பந்து திரும்பும் போது வலது காலை எடுத்து வைக்கிறார். ஆனால் பேட் நேராக இல்லை. பந்து திரும்பும் போது நீங்கள் வலது காலை எடுத்து வைத்து விட்டால் அந்த பந்தை நீங்கள் ஆடியே ஆக வேண்டும்.

சரி செய்யுங்கள்
ஏனென்றால் அப்படி வரும் பந்தை நீங்கள் மிஸ் செய்து எல்பிடபிள்யூ ஆகவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதே ரோகித் சர்மாவை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும். காலுக்கு முன்னால் பேட் வரும்படி அவர் பார்த்துக் கொள்வார். இதனால் தான் ரோகித் சர்மா ரன் அடித்து வருகிறார். ராகுலுக்கு மனதளவில் ஏதோ தயக்கம் இருக்கிறது. அதனை அவர் சரி செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

கோலியை பாருங்கள்
இதனை தொடர்ந்து பேசிய சஞ்சய் மஞ்சுரக்கர் கே எல் ராகுல் அவுட் ஆகி விடுவோமோ என்று பயந்து பயந்து விளையாடுவது போல் தெரிகிறது. கிரிக்கெட்டில் அதிரடி காட்ட வேண்டும் அதற்காக முதல் மூன்று பந்துகளை தடுத்து விட்டு நான்காவது பந்தை நான் சிக்ஸர் அடிக்க சொல்லவில்லை. விராட் கோலி போல் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் .இப்படி செய்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கே எல் ராகுல் வெற்றிகரமாக மாற முடியும். களத்தில் என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொண்டு ராகுல் விளையாட வேண்டும்.

பயப்பட வேண்டாம்
ஆட்டமிழந்து விடுவோம் என பயந்து விளையாடினால் உங்களுடைய உள்ளுணர்வு சிதைந்து விடும் என்று மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் மார்க் வாக், கேஎல் ராகுல் தன்னுடைய திறமையை நம்பி விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த மாதிரி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட கூடாது . உங்கள் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைத்து விளையாடுங்கள். உங்களை நீங்களே ஏன் கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள்? எந்த நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











