Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிப் போய்விட்டது.. ஜடேஜா செய்யும் தவறு.. இனிமே தண்டனைதான்.. சுனில் கவாஸ்கர் சொன்ன யோசனை

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கடி நோ-பால் வீசும் இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாட்டை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற அதிரடி யோசனையையும் அவர் கூறி இருக்கிறார்.

சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற இலங்கை உடனான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், சோனல் தினுஷாவின் அதிரடி சதத்தால் போட்டி டிராவில் முடிந்தது. எனினும், முதல் போட்டியை வென்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் ஆகியோர் அடிக்கடி நோ-பால் வீசி ஏமாற்றமளித்தனர். கடந்த 2021 முதல் ஜடேஜா மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 85-க்கும் மேற்பட்ட நோ-பால்களை வீசியுள்ளார்.

Sunil Gavaskar Suggests Fines for No-Balls Targets Ravindra Jadeja s Frequent Overstepping

இதற்கிடையே, பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே, நோ-பால்களைத் தடுக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 'ஃப்ரீ ஹிட்' முறையைக் கொண்டு வரலாம் என்று வேடிக்கையாகக் கூறியிருந்தார். ஆனால், இந்த யோசனையை கவாஸ்கர் நிராகரித்துள்ளார். பவுன்சர் கட்டுப்பாடு மற்றும் சிறிய எல்லைகள் காரணமாக ஏற்கனவே பேட்டிங் செய்வது எளிதாகிவிட்டதால், ஃப்ரீ ஹிட் வழங்கி பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சாதகமாக மாற்றக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

“2016-இல் இந்திய அணிக்குள் வந்திருந்தால் டெஸ்ட் ஆடி, ஒருநாள் போட்டியிலும்..” சூர்யகுமார் பேச்சு

“2016-இல் இந்திய அணிக்குள் வந்திருந்தால் டெஸ்ட் ஆடி, ஒருநாள் போட்டியிலும்..” சூர்யகுமார் பேச்சு

நோ-பால்களைத் தடுக்க கவாஸ்கர் யோசனை ஒன்றை கூறினார். "ஒவ்வொரு முறை நோ-பால் வீசும் போதும் பந்துவீச்சாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அடுத்தடுத்த தவறுகளுக்கு அபராதத் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும். அத்துடன் பந்துவீச்சு பயிற்சியாளருக்கும் அதில் பாதி தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். ரன்-அப் அளவிடுவதற்கு டேப் இருக்கும் போது, எல்லைக் கோட்டைத் தாண்டி பந்துவீசுவதற்கு எந்த சாக்கும் சொல்ல முடியாது. மேலும், ஃபீல்டிங்கின் போது பந்தை சரியாக பேக்-அப் செய்யாத வீரர்களுக்கும் அபராதம் விதிக்கலாம். இது அணிக்குள்ளான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் ஒரு வேடிக்கையான செயலாக இருக்கும். இந்த அபராதத் தொகையை அணியின் இரவு உணவிற்காகப் பயன்படுத்தலாம்" என்று கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார்.

Story first published: Sunday, August 30, 2026, 10:40 [IST]
Other articles published on Aug 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+