
கரைசேர்த்த ரிஷப்
ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது, ரிஷப் பண்ட் அதிரடியாக 88 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்தார். அவரைத் தவிர்த்து வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 337 எனும் ஓரளவுக்கு டீசண்ட்டான ஸ்கோரை எட்டியது.

கன்சிஸ்டன்சி வேண்டும்
இந்நிலையில், ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "பண்ட் எப்போதும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வீரராக திகழ்கிறார். தனது அபாரமான ஆட்டத்தால் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் ரிஷப், தொடர்ந்து நிலையாக ஆட வேண்டும் என்று விரும்புகிறோம்.

மெல்லிய கோடு
ஆனால், ரிஷப் நம்மை எரிச்சல் அடைய வைக்கிறார். பயமில்லாமல் விளையாடுவதற்கும், கவனக்குறைவாக விளையாடுவதற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது என்பதை ரிஷப் பண்ட் புரிந்து கொள்ள வேண்டும்.

தெளிந்தால் போதும்
பயமில்லாததற்கும், கவனக்குறைவிற்கும் இடையில் உள்ள கோட்டை உணர்ந்து கொண்டாலே, அவர் அதிக நேரம் களத்தில் நின்று விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார். கவனிப்பாரா ரிஷப்?


Click it and Unblock the Notifications