
இன்னும் பயிற்சி வேண்டுமோ!
இந்நிலையில், இந்திய ஃபீல்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், "வீரர்கள் தங்கள் வலைப் பயிற்சியில் புல் ஷாட், கட் ஷாட் அடிப்பதை மட்டும் கற்றுக் கொள்வதோடு இருந்துவிடக் கூடாது. ஃபீல்டிங் கோச் இன்னும் நிறைய பயிற்சி அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

தவற விட்டுவிட்டோம்
குறிப்பாக, பவுலர் பந்துவீசிய பிறகு தன்னை நோக்கி கேட்ச் வந்தால் (caught and bowled) அதையும் பிடிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் சில அற்புதமான caught and bowled வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறோம். வீரர்கள் இதை எப்படி பயிற்சி மேற்கொள்வார்கள் என்று தெரியாது. ஆனால், அவர்கள் கண்டிப்பாக அதற்கு தயாராக வேண்டும்.

கோட்டைவிட்ட புஜாரா
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் இரண்டு கேட்ச் ஆபத்திலிருந்து தப்பித்து தான் 82 ரன்கள் எடுத்தார். ஸ்டோக்ஸ் கொடுத்த caught and bowled கேட்ச் வாய்ப்பை அஷ்வின் தவறவிட, மற்றொரு சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை புஜாரா தவறவிட்டார்.

இந்த ரன் போதுமே
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 218 ரன்களும், சிப்லே 87 ரன்களும், ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் இஷாந்த், பும்ரா, அஷ்வின், ஷாபாஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


Click it and Unblock the Notifications