
நேரடி தொடர்பு கூடாது
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே நடப்பதால் ஐபிஎல் அணிகள், வீரர்கள், உதவியாளர்கள், மைதான ஊழியர்கள் என அனைவரும் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். வெளிநபர்கள் யாருடனும் நேரடி தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

விமர்சனம்
அதே போல, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது என பலவற்றையும் கடைபிடிக்க வேண்டும். சிஎஸ்கே வீரர்கள் பலர் இதை கடைபிடிக்கவில்லை என அந்த அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு வளையம்
ஆனால், இதில் சுரேஷ் ரெய்னா சில விதிமுறைகளை மீறியது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் கோபத்தை தூண்டி விட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதற்குள் இருக்க வேண்டும்.

விதிமுறைகள்
அதாவது, ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள் மட்டுமே இருக்கும் ஒரு வளையத்தை உருவாக்க வேண்டும். ஒரு வளையத்துக்குள் இருப்பவர்கள் அதைத் தாண்டி வெளிநபர்களை சந்திக்கக் கூடாது.

பாதுகாப்பு வளையத்தை மீறினார்
அப்படி வெளி நபர்களை சந்தித்தால் அவர்கள் மீண்டும் 14 நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்பது போன்ற கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ வகுத்துள்ளது. இந்த நிலையில், துபாயில் சுரேஷ் ரெய்னா பாதுகாப்பு வளையத்தை மீறியதாக தற்போது கூறப்படுகிறது.

கோபத்தை கிளறி உள்ளது
சிஎஸ்கே அணியில் இரு வீரர்கள் உட்பட 13 நபர்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில், ரெய்னாவின் விதிமீறல் சிஎஸ்கே நிர்வாகத்தின் கோபத்தை கிளறி உள்ளது. மற்றபடி ஹோட்டல் அறை குறித்து வெளியானது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என கூறப்படுகிறது.

சிறிய குறை
சிஎஸ்கே அணியில் எப்போதும் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் மேனேஜருக்கு ஹோட்டலில் சூட் அறை அளிக்கப்படும். சுரேஷ் ரெய்னாவுக்கும் சூட் அறை அளிக்கப்படும். இந்த முறை அவருக்கு சூட் அறை அதான் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பால்கனி இல்லை என்பது மட்டுமே சிறிய குறை.

சீனிவாசன் அதிருப்தி
ரெய்னாவின் விதிமீறலால் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் அதிருப்தி அடைந்ததாகவும் அதனாலேயே அவர் இந்தியா திரும்பி இருக்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெய்னா என்ன நடந்தது எனக் கூறினால் மட்டுமே உண்மை தெரிய வரும்.


Click it and Unblock the Notifications