ஆக்லாந்து: ஆக்லாந்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார். அவருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
நியூசிலாந்துடன் நடந்த 2 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா ஏற்கனவே தோற்று விட்டது. இந்த நிலையில் நாளை 3வது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இதிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் துடித்து வருவதால் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது.
2வது போட்டியின்போது முகம்மது ஷமி பந்து வீசியபோது, பந்து ரெய்னாவின் கையில் பட்டு காயம் ஏற்பட்டு விட்டது. ஒரு வேளை ரெய்னா விளையாடவிட்டால் அம்பட்டி ராயுடு இடம் பெறுவார் என்று தெரிகிறது.