For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டே வேண்டாம் என தற்கொலை செய்ய நினைத்தேன்: சுரேஷ் ரெய்னா திடுக் தகவல்

By Siva

டெல்லி: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆல் ரவுண்டராக உள்ளவர் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. டி20 போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர் என்று பெயர் எடுத்துள்ளவர். இந்நிலையில் அவர் தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ரயில்

ரயில்

எனக்கு 13 வயது இருக்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் தூங்கும்போது ஏதோ என் தோளில் வெயிட்டாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழித்தேன். என் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஒரு சிறுவன் என் நெஞ்சு மீது அமர்ந்து என் முகத்தில் சிறுநீர் கழித்தான். ஒரு வகையாக அவனை கீழே தள்ளினேன்.

விடுதி

விடுதி

லக்னோவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் இருக்கையில் மிகவும் சிரமமாக இருந்தது. அங்கு பலர் என்னை வம்பிழுத்துக் கொண்டே இருந்தனர். அதனால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.

தாக்குதல்

தாக்குதல்

விளையாட்டு வீரர்கள் விடுதியில் ஒரு முறை என்னையும், என் நண்பனையும் ஹாக்கி ஸ்டிக்கால் அடித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த என் நண்பன் கோமாவுக்கு சென்றுவிட்டான்.

வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

இந்த விடுதி வேண்டவே வேண்டாம் என்று நினைத்து அங்கு சேர்ந்த ஒரே ஆண்டில் வீட்டிற்கு ஓடிவிட்டேன். ஆனால் என் சகோதரரின் அறிவுரையின்பேரில் 2 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாட்டு வீரர்கள் விடுதிக்கு சென்றேன்.

Story first published: Friday, March 11, 2016, 11:14 [IST]
Other articles published on Mar 11, 2016
English summary
Cricketer Suresh Raina said that he once thought about ditching cricket and committing suicide.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+