
பரிசாக கருதுகிறேன்
சூரியகுமாரின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பரிசளிக்கும் விதமாக அவரை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக பிசிசிஐ பதவி வழங்கியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், துணை கேப்டனாக நான் நியமிக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கடந்த ஒரு ஆண்டாக நான் விளையாடிய ஆட்டத்திற்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன்.

கனவா? நிஜமா?
நிச்சயமாக இது எனக்கு ஒரு நல்ல விஷயம். துணை கேப்டனாக செயல்படுவது குறித்து நான் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். இந்த செய்தியை கேட்டவுடன் ஒரு நிமிடம் கண்களை மூடி இது கனவா இல்லை நிஜமா என்று என்னை நான் சோதித்து பார்த்தேன்.என்னுடைய தந்தை தான் அணி அறிவிக்கப்பட்ட மெசேஜை எனக்கு அனுப்பினார்.

அறிவுரை
அவர் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே இருப்பார். இதனால் அணிவந்தவுடன் எனக்கு உடனே அனுப்பிவிட்டார். எனினும் துணை கேப்டன் பதவி வந்ததால் எந்த நெருக்கடியையும் அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாதே, பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் விளையாடு என்று எனக்கு அறிவுரை கூறினார். மும்பை அணிக்காக நானும் ஹர்திக் பாண்டியாவும் நிறைய முறை விளையாடி இருக்கிறோம் .எங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது.

நல்ல உறவு
நாங்கள் பேட்டிங் வரிசையிலும் ஒருவருக்கு பின் ஒருவர் தான் களம் இறங்குவோம் அதிக முறை ஒன்றாக பேட்டிங் செய்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த தலைவராக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கூட அவர் எப்படி அணியை வழிநடத்தினார் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் கீழ் விளையாடுவதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சூரியகுமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











