ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல் டைம் சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இன்னும் 8 புள்ளிகளே தேவை
மும்பை : உலகின் சிறந்த T20I பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், ICC ஆடவர் T20I பேட்டிங் தரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். எனினும் ஆல் டைம் சாதனை படைக்க,அவருக்கு இன்று ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராஞ்சியில் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் தற்போதைய தொடரின் முதல் போட்டியின் போது சூர்யகுமார் 47 ரன்களை அடித்தார். அப்போது 910 புள்ளிகளை எட்டினார்.
தொடரின் இரண்டாவது போட்டியில் சூர்யகுமார் ஆட்டமிழக்காமல் 26 ரன்களை குவித்த போது, 2 புள்ளிகள் 908 ரேட்டிங் புள்ளிகளுக்கு திரும்பினார்.அகமதாபாத்தில் இன்று நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் தீர்மானிக்கும் போட்டியில் தனது சாதனையை மேம்படுத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சூர்யகுமாருக்கு வாய்ப்பு
ஆடவர் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆல் டைம் அதிக புள்ளிகளை பெறுவதற்கான போட்டியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனை சூர்யகுமார் நெருங்கி வருகிறார். மலான் 2020 ஆம் ஆண்டு 915 புள்ளிகள் மதிப்பீட்டை அடைந்தார். தற்போது சூர்யகுமார் யாதவ் ஆல் டைம் ரெக்கார்டில் இரண்டாவது அதிக புள்ளிகள பெற்றுள்ளார்.
கடந்த மாதம் ஐசிசி ஆண்கள் டி20 ஐ ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூசி வீரர் முன்னேற்றம்
இதே போன்று நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் பேட்டிங்கிற்கான பட்டியலில் 8 இடங்கள் முன்னேறி 19 வது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் சக வீரர் டேரில் மிட்செல் இந்தியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அரைசதத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக ஒன்பது இடங்கள் முன்னேறி 29 வது இடத்தைப் பிடித்தார்.இதே போன்று கேப்டன் மிட்செல் சான்ட்னர் தான், இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஈர்க்கும் ஆல்-ரவுண்டர் மூலம் மிகவும் சிங்கப் பாய்ச்சலை பாய்ந்துள்ளார்.

சிஎஸ்கே வீரர் அசத்தல்
இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்காக சான்ட்னர் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார், மேலும் தனது சுழற்பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார்.30 வயதான சாண்ட்னர் பந்துவீச்சாளர்களுக்கான சமீபத்திய பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார், மேலும் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஐந்து இடங்கள் உயர்ந்து 23 வது இடத்திற்கு வெகுமதி அளிக்கிறார்.

பெவுமா முன்னேற்றம்
இதே போன்று ஒருநாள் தரவரிசையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் டெம்பா பவுமா சதம் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக 27 இடங்களை முன்னேறி 49 வது இடத்தைப் பிடித்தார்.தொடரின் தொடக்க ஆட்டக்காரர் வான் டெர் டஸ்ஸன் தான் சதம் விளாசினார், 766 இலிருந்து 795 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பாபர் அசாம்க்கான இடைவெளி குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications