For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூர்யகுமார் யாதவ் இடத்துக்கு வந்த ஆபத்து.. ஒருநாள் போட்டியில் தொடரும் சொதப்பல்..ஜடேஜாவுக்கு வாய்ப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் சூரியகுமார் யாதவ் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.

கடைசி போட்டியில் பிளேயிங் லெவனில், இது வரை விளையாடாத வீரர்களான இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.

நடப்பு தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு அவரது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

கடைசி கட்டத்தில் த்ரில்லர்..இந்தியா இலக்கு வரை வந்த வெஸ்ட் இண்டீஸ்..3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகடைசி கட்டத்தில் த்ரில்லர்..இந்தியா இலக்கு வரை வந்த வெஸ்ட் இண்டீஸ்..3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஏமாற்றம்

ஏமாற்றம்

தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் விளாசினார். இதனால் இந்திய அணியில் அவரது இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது .

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் சதம் விளாசினார். அதன் பிறகு அவர் பெரிதாக எந்த ரன்களையும் அடிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரே ஒரு முறை மட்டும் தான் 20 நன்களை கடந்துள்ளார் .குறிப்பாக பலம் குன்றிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் 13 மற்றும் 9 ரன்கள் மட்டுமே அளித்துள்ளார்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 27 மற்றும் 16 ரன்கள் மட்டுமே சூரியகுமார் அடித்திருந்தார்.இதனால் கிடைக்கும் வாய்ப்பை சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் வீணடித்து வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது .இதனால் வெஸ்ட் இண்டீஸ் எதிரான கடைசி ஒரு நாள் போட்டியே சூரியகுமார் யாதவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

IND vs ENG 3rd ODI: செய்ய வேண்டிய Changes என்ன? | Aanee's Appeal | *Cricket
ஜடேஜாவின் இடம்

ஜடேஜாவின் இடம்

இதில் சூரியகுமார் யாதவ் பெரிதாக சாதிக்கவில்லை என்றால் சீனியர்கள் அணிக்கு திரும்பும் போது அவரது இடம் கேள்விக்குறியாகி விடும் என கருதப்படுகிறது. நாளைய போட்டிகளில் ஜடேஜா பிளேயிங் லெவனுக்குள் வந்தால் அக்சர் பட்டேல் இடம் காலியாகும் என கருதப்பட்டது. ஆனால் அவர் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடியதால் தற்போது சூரியகுமார் இடத்துக்கு தான் ஆபத்து வரும் என கருதப்படுகிறது.

Story first published: Tuesday, July 26, 2022, 23:36 [IST]
Other articles published on Jul 26, 2022
English summary
Suryakumar yadav is place in danger after poor performanceசூர்யகுமார் யாதவ் இடத்துக்கு வந்த ஆபத்து.. ஒருநாள் போட்டியில் தொடரும் சொதப்பல்..ஜடேஜாவுக்கு வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X