மும்பை: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா கலக்குவார் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார். “அரையிறுதிக்கு ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருக்கிறார்” என அபிஷேக் மீது நம்பிக்கை தெரிவித்த பாண்டிங், இந்தியாவின் பேட்டிங் பலதையும் பாராட்டினார்.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மாவின் பயணம் சவாலாக அவைருக்கு அமைந்துள்ளது. டி20 தரவரிசையில் நம்பர் 1 வீரராக இருந்தும், போட்டியை மூன்று தொடர்ச்சியான டக்குகளுடன் தொடங்கினார். உடல்நலக்குறைவு காரணமாக நமீபியாவுக்கு எதிரான லீக் போட்டியில் அவர் விளையாடவில்லை.

சூப்பர் எட்டு சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து முதல் ரன்னைப் பெற்றார். ஜிம்பாப்வேக்கு எதிரான முக்கியமான போட்டியில் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து நம்பிக்கையை மீட்டெடுத்தார். ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 10 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சரிவு தொடர்ந்தது. அவர் ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று டக்குகள் உட்பட 80 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இது குறித்து பேசிய பாண்டிங், அபிஷேக் இத்தொடரின் அதிக ரன் குவித்த வீரராக இருப்பார் என முதலில் கணித்ததாகத் தெரிவித்தார். அந்தக் கணிப்பு பலிக்காவிட்டாலும், அபிஷேக்கிற்கு தான் தமது முழு ஆதரவு.இவரை நீக்கி ரிங்கு சிங்கை கொண்டுவந்தால், இன்னொரு போட்டி வெற்றியாளர் அணிக்குள் வருவார்," என்று பாண்டிங் கூறினார். இடது-வலது கை தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ஆபத்தான இஷான் கிஷன் கொண்ட தொடக்க வரிசையை தான் விரும்புவதாகத் தெரிவித்தார். அபிஷேக்கின் பயிற்சியையும் உன்னிப்பாகக் கண்காணிப்பேன் என்றார்.
ஒரு வீரர் மோசமான காலகட்டத்தில் இருக்கும்போது, தினமும் ஒன்றரை மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபடுவது சிறந்ததல்ல என்று பாண்டிங் அறிவுறுத்தினார். சில நாட்கள் ஓய்வெடுத்து, மனதை புத்துணர்ச்சியடையச் செய்வது நல்லது. திறன்கள் எங்கும் சென்று மறைந்துவிடாது என அவர் குறிப்பிட்டார்.

"இதுபோன்ற தொடர்களில், தொடர்ச்சியான அழுத்தத்தில் இருந்து முடிவுகள் சாதகமாக இல்லாதபோது, சில சமயம் பேட்டிங் செய்யாமல் இருப்பது நல்லது. பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி, வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம், மனதளவில் சோர்வடைவதைத் தடுக்கலாம்," என்று பாண்டிங் விளக்கினார்.அபிஷேக் ஷர்மா அரையிறுதிப் போட்டிக்காக 'ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருக்கிறார்' என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக பாண்டிங் மீண்டும் கூறினார்.