மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து அணி தோற்கடிக்கும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். வியாழன் அன்று மும்பையில் நடைபெறும் இப்போட்டியில், இங்கிலாந்தின் சிறந்த ஃபில்டிங், பேட்ஸ்மேன்கள் ரன் ஓடுவது, மற்றும் வலுவான சுழற்பந்துத் தாக்குதலே வெற்றிக்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, 12 விக்கெட்டுகளுடன் சராசரி 15.33, எப்னாமி விகிதம் 7.66 எனப் பெற்றும், எதிரணிகளால் அடித்து நொறுக்கப்படுகிறார் என வாகன் விமர்சித்துள்ளார். இங்கிலாந்தின் லியாம் டாவ்ஸனின் எக்னாமி விகிதம் 7.30 ஆக சக்கரவர்த்தியை விடச் சிறப்பாக உள்ளது.

இது குறித்து பேசிய வாகன், "இந்தியாவை விட இங்கிலாந்துக்கு சிறந்த சுழற்பந்துத் தாக்குதல் உள்ளது. சக்கரவர்த்தி எப்படி பந்து வீசுகிறார் என அனைவரும் கண்டுபிடித்துவிட்டனர். டாவ்ஸன், ரஷித் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் இந்தத் தொடரின் சிறந்த பவுலர்கள். இங்கிலாந்தின் ஃபில்டிங்கும் அபாரமாக உள்ளது. அவர்கள் மிகவும் எச்சரிக்கையாகத் தெரிகிறார்கள். விக்கெட்டுகளுக்கு இடையேயான இங்கிலாந்து ரன் ஓடுவது சிறப்பாக உள்ளது.

நீங்கள் உங்களால் கட்டுப்படுத்தக்கூடிய சிறிய விஷயங்களை இங்கிலாந்து மிகச்சிறப்பாகச் செய்வதாகத் தெரிகிறது. மும்பையில் இங்கிலாந்து வெற்றியைப் பெறும் என்று எனக்கு ஒரு வினோத உணர்வு உள்ளது,".
இந்தியாவின் சுழற்பந்துப் பிரிவில், சக்கரவர்த்திக்கு ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் மட்டுமே இருக்கிறார். கௌதம் கம்பீர், குல்தீப் யாதவுக்கு பேட்டிங் தெரியாததால், அவரைத் தேர்வு செய்வதில்லை. ஆனால் இங்கிலாந்தால் டாவ்ஸன், ரஷித், ஜாக்ஸ், ரெஹான் அஹமது போன்ற பேட்டிங் திறன் உள்ளதால் பல சுழற்பந்து வீச்சாளர்களைக் களமிறக்க முடியும்.

இங்கிலாந்து, சமீபத்திய ஐந்து போட்டிகளிலும், சூப்பர் எட்டில் நடந்த மூன்று போட்டிகளிலும் வென்று சிறப்பான ஃபார்மில் உள்ளது. இந்த வெற்றிப்பாதை குறித்து வாகன், "அவர்கள் வெற்றி பெறும் வழியைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிகிறது. நியூசிலாந்திற்கு எதிரான வெற்றி, ஒரு சாதாரண போட்டியாக இருந்தபோதிலும், ஒரு சிறந்த முயற்சி," என்று கூறினார்.