2026 டி20 உலககோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது அணியில் உள்ள பல வீரர்கள் இந்திய அணியுடன் மோத விரும்புவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். வியாழக்கிழமை மார்ச் 5ஆம் தேதி மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த முக்கியமான போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன.
இது குறித்து பேசிய ஹாரி ப்ரூக், இந்த அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கடுமையான அழுத்தம் இருக்கும் என்று கூறினார். குறிப்பாக, போட்டியில் இந்திய ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவுக்கு மத்தியில், எதிர் அணியான தங்களது அணிக்கு நிலைத்து நிற்பது சவாலாக இருக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளன. ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி சிறப்பான ஃபார்மில் உள்ளது. சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து ஐந்து வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளிடம் மட்டுமே அவர்கள் தோல்வியடைந்தனர். மேற்கிந்தியத் தீவுகளை இந்தியா கொல்கத்தாவில் நடந்த காலிறுதியில் வீழ்த்தியது.
இது குறித்து பேசிய ப்ரூக், "நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியாவை எப்படியும் எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இது இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அழுத்தம் கொண்ட ஒரு பெரிய போட்டி. இந்தியாவிற்கு அபரிமிதமான ரசிகர் ஆதரவு இருக்கும். எங்களுக்கு ஆதரவாக குறைவான ரசிகர்களே இருப்பார்கள் என்று தோன்றுகிறது. சத்தம் பிளக்கும். இருப்பினும், எங்களால் முடிந்த சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று நம்புகிறேன்," என்று குறிப்பிட்டார்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவது இது மூன்றாவது முறையாகும். 2022 ஆம் ஆண்டில், இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதற்கு பதிலடியாக, 2024 தொடரில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, இங்கிலாந்தை வெறும் 103 ரன்களுக்குச் சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.இந்த போட்டிக்கு இங்கிலாந்து அணி செல்லும்போதுள்ள ஒரே முக்கிய கவலை, கேப்டன் ஜோஸ் பட்லரின் மோசமான ஃபார்ம் தான். அவர் இந்தத் தொடரில் ஏழு இன்னிங்ஸ்களில் 8.86 சராசரியில் வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 106.90 ஆக உள்ளது.
" title="T20 WC: அரையிறுதியில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தும்.. முன்னாள் கேப்டன் கருத்து
இருப்பினும், முன்னாள் கேப்டனுக்கு ஹாரி ப்ரூக் தனது முழு ஆதரவையும் அளித்துள்ளார். அவர், "ஜோஸை தனியாக விட்டுவிடுங்கள். அவர் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர், அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மற்ற வீரர்கள் நிலைத்துநின்று சிறப்பாக விளையாடியது பாராட்டுக்குரியது. எங்கள் டாப் 7 வரிசையில் பல திறமையான வீரர்கள் உள்ளனர், ஒருவர் சிறப்பாக விளையாடினால் எதிரணிகள் குழப்பமடைந்துவிடுவார்கள்," என்று வலியுறுத்தினார்.