சென்னை: டி20 உலக கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நிலையல், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் இருவரையும் களமிறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய அவர், "தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்றால், ஒரு மோசமான நாள் வருவது இயல்புதான். இவ்வளவு சீக்கிரம் அது வந்தது எனக்கு மகிழ்ச்சி. இது இந்தியாவுக்குத் உந்துதலாக இருக்கலாம்," என்று குறிப்பிட்டார்.

"இந்த சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டியில் தோற்றால் கூட, கடுமையான நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என்பதை அவர்கள் இந்த அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டிருப்பார்கள்," என்றும் அவர் எச்சரித்தார். நான் அக்சரையும் சுந்தரையும் சேர்த்து களமிறக்க வேண்டும் என்று கூறுவேன். இது உங்களுக்கு கூடுதல் பந்துவீச்சு வாய்ப்பை வழங்கும்," என்றார்.

"ஒரு பந்துவீச்சாளர் சோபிக்காமல் போகும் ஒரு நாளில், உதாரணத்திற்கு வருண் சக்ரவர்த்தியைப் போல, கூடுதலாக ஒரு பந்துவீச்சு வாய்ப்பு தேவை," என்று சாஸ்திரி விளக்கினார். அக்சர் பட்டேல் களமிறங்கினால், 5 முதல் 8 வரையிலான எந்த இடத்திலும் பேட் செய்ய முடியும், என்றும் அவர் குறிப்பிட்டார்.
"தற்போதைய அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கும்போதிலும், எட்டு பேட்ஸ்மேன்களால் டி20 கிரிக்கெட்டில் வேலையைச் செய்ய முடியாவிட்டால், ஏதோ தவறு உள்ளது. நீங்கள் அதிகம் தவறவிடுவது கூடுதல் பந்துவீச்சு வாய்ப்புகள் இல்லாததுதான்; அதுதான் முக்கியம்," என்று அவர் கூறினார்.

"இதற்காக ரிங்கு சிங் வெளியே இருக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அவர் வரவேண்டுமானால், ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாகவே அணிக்குள் வர வேண்டும்," என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார். தென்னாப்பிரிக்கா உடனான தோல்வி, அரையிறுதிக்கு முன்பே நடந்தது தமக்கு மகிழ்ச்சி என்றும், தங்களது திட்டங்களை மாற்ற பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்யகுமாருக்கு இது ஒரு வாய்ப்பு என்றும் அவர் கூறியிள்ளார்.