மும்பை: டி20 உலகக் கோப்பைப போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் அணி நிர்வாகத்தின் மீது கடுமையாகச் சாடியுள்ளார். சூப்பர் 8-ல் இலங்கையை வென்றாலும், நிகர ரன் ரேட்டை (Net Run Rate) நியூசிலாந்தை விட முந்த முடியாததால் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் இழந்தது.
பாகிஸ்தான் வாரிய வரலாற்றிலேயே சக்திவாய்ந்த தலைவரான நக்வியால் வலுவான நிர்வாக அமைப்பை உருவாக்க முடியாவிட்டால், அவரது அதிகாரத்தால் அணிக்கு எந்தப் பயனும் இல்லை என ஷோயப் அக்தர் விமர்சித்தார். மேலும், அணி நிர்வாகத்தின் தேர்வு முடிவுகளும் திட்டமிடலும் "முற்றிலும் யோசனையற்றது" என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி உட்பட நான்கு தொடர்ச்சியான ஐசிசி நிகழ்வுகளில் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறாதது ரசிகர்களை விரக்தியடையச் செய்தது. இந்தத் தோல்விகளுக்கு அணி நிர்வாகம் பொறுப்பு என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்.
இது குறித்து பேசிய அக்தர், "பாகிஸ்தானின் நிர்வாகம் முற்றிலும் குழப்பமாகத் தெரிகிறது. கடந்த 15 நாட்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட XI தவறானது என்பதை இன்றைய அணித் தேர்வு உறுதிப்படுத்தியது. சயீம் அய்யூப், குவாஜா நஃபேவுக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஒரு தெளிவான தவறு," என்றார்.
அவர் மேலும், "நிவாகம் குழப்பமாக இருக்கிறது. மொஹ்சின் நக்வி தன்னைச் சுற்றியுள்ள சாதாரணமானவர்களால் சூழப்பட்டுள்ளார், இது அவரை கேலிக்குரியவராக ஆக்குகிறது. பாகிஸ்பன் அணி நிர்வாகத்திற்கு துப்பில்லை என்றும் விமர்சித்தார்.

“வீரர்களைச் சரியான இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கும்போதுதான் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்பதை இந்தத் தேர்வு காட்டியது. இயல்பான ஒரு தொடக்க வீரரான ஃபகர் ஸமான் முன்னதாக விளையாடவில்லை. இருப்பினும், இன்று ஃபர்ஹான், ஃபகர் மற்றும் அப்ரார் அனைவரும் சிறப்பாகப் பங்களித்தனர்,” என்றும் அக்தர் வலியுறுத்தினார்.