டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இரவு கொல்கத்தாவில் நடைபெற உள்ள நிலையில், இப்போட்டியில் இந்தியா வெற்றி பேற வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் மத வேறுபாடின்றி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
டி20 உலக கோப்பை சூப்பர்-10 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இன்று இரவு 7.30-க்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர்.
இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று, நாடு முழுவதும் ரசிகர்கர்கள் பிரார்த்தனையில் இறங்கியுள்ளனர். உத்தரபிரேதச மாநிலம், கோரக்பூர் நகரில், முஸ்லிம் மக்கள் இந்தியாவின் வெற்றிக்காக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கோவையில் பிரமாண்ட ஊதுபத்தியை கொளுத்தி தொடர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் பூரி கடற்கறையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.