
கோஹ்லி ரன் அடிக்கனும்
இந்தியா இந்த டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால், விராட் கோஹ்லி அதிக ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். கோஹ்லிதான் இந்தியாவுக்காக தொடர்ந்து சீராக ஆடும் வீரராகும்.

ஆஸ்திரேலியர்கள் போல
மைதானத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவதை பார்க்கும்போது, பல முன்னணி ஆஸ்திரேலிய வீரர்களிடம் இருந்த சுபாவம் நினைவுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில் கோஹ்லி எப்போதுமே கவனம் செலுத்தி வருகிறார்.

கூலாக இருக்க வேண்டும்
ஆக்ரோஷமான ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக ஆடுவதற்கு கோஹ்லி எப்போதுமே முயற்சி செய்பவர். ஆனால், நெருக்கடியான தருணங்களில் தன்னை கூலாக வைத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுந்துவரும்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றாலும், இந்தியாவால் திரும்பவும் வீறு கொண்டு எழுந்து வர முடியும் என்று நம்புகிறேன். நியூசிலாந்தின் திறமையான பந்து வீச்சால்தான் அன்றைய போட்டியில் இந்தியா தோற்றது.

சகஜம்
நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டி எதிலும் வென்றதில்லை என்பதும் இந்தியாவுக்கு மனரீதியாக நெருக்கடியை கொடுத்திருக்கும். ஏதாவது ஒருநாளில், ஒரு அணி சறுக்குவது சகஜமானது. எதுவுமே க்ளிக் ஆகாமல் அன்றைய தினம் சொதப்பல்கள் நிகழும். அதற்காக சோர்ந்துவிடக்கூடாது. அடுத்த போட்டி பற்றி இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











