Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதியில் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு?.. ப்ளேயிங் 11 குறித்து மனம் திறந்த டிராவிட்.. முழு விவரம்!

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து அடுத்ததாக அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதன்படி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 அரையிறுதி போட்டி

அரையிறுதி போட்டி

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 குறித்த விவாதம் தான் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகியோரிடையேயான போட்டி இருந்து வருகிறது. இதில் தினேஷ் கார்த்திக் தான் ப்ளேயிங் 11ல் இடம்பிடித்தார். ஆனால் அவரால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இதனையடுத்து ரிஷப் பண்ட்-க்கு கடந்த ஜிம்பாப்வே போட்டியின் போது வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினார்.

 ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

டி20 கிரிக்கெட்டில் சொதப்பி வரும் ரிஷப் பண்ட், கிடைத்த வாய்ப்பிலும் சொதப்பியதால் அடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மற்றொருபுறம் தினேஷ் கார்த்திக்கிற்கு முன்கூட்டியே களமிறங்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் என்ன முடிவு எடுப்பார் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 டிராவிட்டின் பேச்சு

டிராவிட்டின் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து டிராவிட் பேசியுள்ளார் அதில்,ஒரு வீரரின் ஃபார்மை ஒரே ஒரு போட்டியை வைத்து முடிவு செய்ய மாட்டோம். எதிரணியில் இதுபோன்ற பவுலர்கள் இருக்கிறார்களோ, அதற்கேற்ற வகையில் தான் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வோம். அதில் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. நாங்கள் இன்னும் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை இழக்கவில்லை. 15 வீரர்கள் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

தவறிய வியூகம்

தவறிய வியூகம்

அனைத்து வீரர்களையும் எப்போது வேண்டுமானாலும் அழைப்போம் என்று தான் கூறி வைத்துள்ளோம். ரிஷப் பண்ட் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஜிம்பாப்வே போட்டியில் இடதுகை ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என பணி கொடுத்தோம். அவரும் அதை முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அது தவறானது. ரிஷப் பண்ட்-ஐ மனதில் வைத்துள்ளோம். எதிர்வரும் போட்டிகளில் பயன்படுத்தலாம் என டிராவிட் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 7, 2022, 21:30 [IST]
Other articles published on Nov 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+