மும்பை : இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு மேலும் ஒரு அடியாக அவர்கள் இருவரையும் 2024 டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யக் கூடாது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் வரும் முன்பு வரை உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே இந்திய அணியில் இடம் கிடைத்து வந்தது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், அனில் கும்ப்ளே, வீரேந்தர் சேவாக் என பல ஜாம்பவான்கள் அங்கிருந்து தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
