நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் பதில் அளித்தார். அப்போது எந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறினாலும் ஆஸ்திரேலியா மட்டும் முன்னேறி விடக் கூடாது என அவர் கூறினார்.
2024 டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான விளம்பர தூதர்களில் ஒருவராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங், "இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இறுதி போட்டிக்கு முன்னேறி விடக்கூடாது" என்று கூறி சிரித்தார்.
