Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் 4,5 அணிகள் பலமாக இருக்கு.. இந்திய அணி எச்சரிக்கையா இருக்கனும்- EX கோட்ச் வார்னிங்

மும்பை: இந்திய அணியின் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் விதத்தை முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே வெகுவாகப் பாராட்டியுள்ளார். தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி, ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளது, அணியின் திறமையை வெளிப்படுத்தியதாக மாம்ப்ரே குறிப்பிட்டுள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் கணிக்க முடியாத தன்மை அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குரூப் ஏ பிரிவில் நான்கு தொடர் வெற்றிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. இந்தத் தொடரின் முக்கியமான அடுத்த கட்டத்திற்குள் நுழையும்போது, இதுவரை சந்தித்த சவால்கள் அணிக்கு நன்மையளிக்கும் என மாம்ப்ரே நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் சீசன் 6 தொடக்க விழாவில் பேசிய மாம்ப்ரே, "இந்திய அணி விளையாடும் விதம் அற்புதம். அவர்கள் ஆடும் கிரிக்கெட் உண்மையிலேயே மிகச் சிறப்பானது," என்று பாராட்டியுள்ளார். "வெற்றி பெறுவது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் வெளிப்படுத்தும் திறமையும் வெற்றி பெறும் விதமும்தான் முக்கியம். நாங்கள் வெற்றி பெற்றதை நான் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் வெல்லும் விதம் தான் எங்களை ஈர்த்தது," என்றார்.

இந்தத் தொடரில் இந்திய அணி சில சவாலான தருணங்களை எதிர்கொண்டுள்ளது என்றும், இந்த அனுபவங்கள் வீரர்களை எச்சரிக்கையாகவும், முன்னால் வரவிருக்கும் கடினமான சவால்களுக்கு சிறப்பாகத் தயாராகவும் உதவும் என்றும் மாம்ப்ரே குறிப்பிட்டார்."சவாலான தருணங்கள் எங்களுக்கு ஏற்பட்டன. அமெரிக்காவுக்கு எதிரான போட்டி ஒரு சிறந்த உதாரணம். திடீரென மூன்று, நான்கு விக்கெட்டுகள் சரிந்தபோது, 'இது நம் கையை விட்டுப் போகுமோ?' என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அப்போது ஒரு வீரர் வந்து அசத்தினார்," என்றார்.

"சூர்யகுமார் யாதவ் அப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாடி ஆட்டத்தை நம் பக்கம் கொண்டுவந்தார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், எல்லோரும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். கடந்த நான்கு போட்டிகளில், நான் சரியாகக் கூறினால், நான்கு வெவ்வேறு வீரர்கள் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளனர். இது எல்லோரும் பங்களிப்பதை உறுதி செய்கிறது," என மாம்ப்ரே கூறினார்.

"ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் மட்டுமே பேட்டிங் அல்லது பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உண்மையான அழுத்தமான சூழ்நிலைகளில், நீங்கள் அந்த இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தால், அது சற்று வித்தியாசமான சூழலாக மாறும். ஆனால் எல்லோரும் பங்களிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றும் அவர் விளக்கினார்.

"நீங்கள் சற்று கவனக்குறைவாக இருந்தாலும், உங்கள் ஆட்டத்தில் உச்சத்தில் இல்லாவிட்டால், வேறு ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே போட்டி உணர்த்துகிறது," ஜிம்பாப்வே போன்ற ஒரு அணி ஆஸ்திரேலியாவை தோற்கடிப்போம் என்று நினைத்திருக்காது. ஆனால், அவர்கள் தங்கள் ஆட்டத்தின் மூலம் அந்த வெற்றியைப் பெற்றார்கள்," என்றும் மாம்ப்ரே குறிப்பிட்டார்.

"தென் ஆப்பிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இலங்கை நன்றாக செயல்பட்டுள்ளது. நியூசிலாந்து எப்போதும் ஐசிசி தொடர்களில் வலுவான போட்டியாளராக இருக்கும், அது போன்ற போட்டிகளில் ஒரு வித்தியாசமான அணியாக அவர்கள் வருவார்கள். நான்கு அல்லது ஐந்து சிறந்த அணிகள் உள்ளன," என்று அவர் கணித்தார்.

Story first published: Thursday, February 19, 2026, 22:25 [IST]
Other articles published on Feb 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+