மும்பை: 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10வது சீசன் இந்த வாரம் கோலாகலமாகத் தொடங்குகிறது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. முதல் நாளில் பாகிஸ்தான்-நெதர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள்-ஸ்காட்லாந்து மோதல்கள் தொடங்குகின்றன. நடப்பு சாம்பியன் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த உலககோப்பை திருவிழாவில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. அவை: இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜிம்பாப்வே, ஓமன், நேபாளம், கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஆகும்.

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், 51 டெஸ்ட் மற்றும் 60 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு தலைமை தாங்கியவர். அவர், நடப்பு சாம்பியன் இந்தியா, இரு முறை சாம்பியன் இங்கிலாந்து, 2021 ரன்னர்-அப் நியூசிலாந்து அத்துடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளையும் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று கணித்துள்ளார்.
பிப்ரவரி 2, 2026 அன்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில்பதிவிட்ட அவர், "எனது 4 டி20 உலகக் கோப்பை அரையிறுதி அணிகள்... இந்தியா, இங்கிலாந்து, என்.இசட் & ஆஸ்திரேலியா" என்று குறிப்பிட்டிருந்தார்.சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பையில் பட்டத்தை தக்கவைத்து, இச்சாதனையைப் படைக்கும் முதல் அணி என்ற நோக்கில் உள்ளது. சொந்த மண்ணில் எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை.
மேலும், எந்த அணியும் இரண்டுக்கும் மேற்பட்ட முறை பட்டத்தை வென்றதில்லை. இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மட்டுமே ஒரு முறைக்கு மேல் கோப்பையை வென்றுள்ளன.குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியாவுடன் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7 அன்று மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நமீபியாவுடன் மோத டெல்லிக்கு இந்திய அணி பயணிக்கிறது. பின்னர், இந்திய அணி கொழும்புவில் பலப்பரீட்சை செய்யும் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.ஆனால், இந்தப் பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இந்திய அணி தனது குரூப் நிலை போட்டிகளை பிப்ரவரி 18 அன்று அஹமதாபாத்தில் நெதர்லாந்துடன் மோதி நிறைவு செய்யவுள்ளது.
20 அணிகளும் தலா ஐந்து கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் 'சூப்பர் 8' சுற்றுக்கு அடுத்தகட்டமாகச் செல்லும். இங்கு தலா நான்கு கொண்ட 'குரூப் 1', 'குரூப் 2' என இரண்டு பிரிவுகள் அமையும். 'சூப்பர் 8' சுற்றின் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் மோதும். இந்த ஆட்டங்கள் மார்ச் 4 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.