மும்பை : 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தது. அப்போது குரூப் சுற்றில் தான் ஆடிய 6 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை மட்டுமே அடைந்து முதல் இடத்தில் இருந்தது.
பின்னர் அரை இறுதியில் இங்கிலாந்து அணியை சந்தித்தது. அடிலெய்டு மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது எவ்வளவு ஸ்கோர் எடுக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் ஆடியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா ரன் குவிக்க முடியாமல் திணறினார். அவர் 28 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
