
முக்கிய ஆட்டம்
இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என முன்னாள் வீரர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் அதிருப்தி
கடந்த போட்டியில் இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதே போல ஹர்திக் பாண்ட்யா பவுலிங் போடாமல் இருப்பதால் அவரையும் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

அணி மாற்றங்கள்
இந்நிலையில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூரை அழைத்து வரவுள்ளார் விராட் கோலி. இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் திட்டத்தில் ஷர்துல் உள்ளார். ஆனால் அவரை எந்த வீரருக்கு மாற்றாக எந்த இடத்தில் பயன்படுத்துவோம் என்பது கூற முடியாது எனத்தெரிவித்துள்ளார்.

வெளியேறுவது யார்
ஹர்திக் பாண்ட்யா கடந்த சில நாட்களாக பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் 2 ஓவர்களையாவது வீச தயாராக இருப்பதாக தெரிகிறது. இதனால் புவனேஷ்வர் குமாரை உட்காரவைத்துவிட்டு தான் ஷர்துல் கொண்டு வரப்படவுள்ளார் என உறுதியாகியுள்ளது. இதே போல வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அஸ்வின் களமிறக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க கோலி முடிவெடுத்துள்ளார்.

ப்ளேயிங் 11 கணிப்பு
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி


Click it and Unblock the Notifications