
இந்தியாவுக்கு பின்னடைவு
இந்த போட்டிகளில் முன்னணி வீரர்கள் இல்லை எனக்கூறினாலும், விக்கெட்கள் கீப்பர்கள் இருவருமே சொதப்பியது பேசுப்பொருளாகியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இளம் வீரர் ரிஷப் பண்ட்-க்கு ஓப்பனிங் களமிறங்கும் வாய்ப்பே கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டையுமே அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 9 (16), 9 (11) என சொற்ப ரன்களையே அடித்து வெளியேறினார்.

பண்ட்-ன் சோகம்
நடப்பாண்டில் இதுவரை 15 டி20ல் ஆடியுள்ள பண்ட் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 127 க்கு குறைந்துள்ளது. இதன் மூலம் இந்திய ப்ளேயிங் 11ல் அவர் சேர்க்கப்படுவது ரிஸ்க்-காக பார்க்கப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கலக்கும் அவர் டி20-ல் சரிபட்டு வரமாட்டார் என தெரிந்துள்ளது. இவர் தான் இப்படி என்றால், மாற்று வீரராக உள்ள தினேஷ் கார்த்திக்கும் சொதப்புகிறார்.

கார்த்திக்-ம் சொதப்பல்
ஃபினிஷர் பணிக்காக களமிறங்கும் தினேஷ் கார்த்திக் இந்த இரண்டு போட்டிகளிலும் 19 (23), 10 (14) மட்டுமே அடித்து ஏமாற்றியுள்ளார். கடந்த 7 டி20 போட்டிகளில் அவர் ஒரே ஒருமுறை மட்டுமே 30 ரன்களை தாண்டியுள்ளார். அவருக்கு குறைவான பந்துகளே கிடைப்பது உண்மை தான். ஆனால் ஐபிஎல்-ல் ஆர்சிபிக்காக அவர் செய்த மேஜிக் இங்கு நடக்கவில்லை என்பது தான் ரசிகர்களின் கவலை.

டிராவிட்-க்கு சிக்கல்
ஃபினிஷாராக களமிறங்கிய போதும் ஆஸ்திரேலியாவில் இப்படி மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் சேர்ப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல. எனவே இவர்கள் இருவர் மீதும் தனி கவனம் வைத்து டிராவிட் மாற்றம் கொண்டு வரவேண்டும். அடுத்த 2 பயிற்சி போட்டிகளில் இந்த ஃபினிஷிங் பிரச்சினையை சரி செய்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications











