
அசத்தல் ஓப்பனிங்
கடந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிக மோசமாக சொதப்பியது. ஆனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி பொளந்து கட்டினர். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்களை சேர்த்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்
47 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்களை விளாசினார். அவர் அவுட்டான சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். 48 பந்துகளை சந்தித்த அவர், 69 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27 ரன்களும், பாண்ட்யா 13 பந்துகளில் 35 ரன்களும் விளாச 20 ஒவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது.

தொடக்கமே அதிர்ச்சி
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா (13), முகமது செஷாத் (0) என அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த வீரர்களாலும் அதிரடி காட்ட முடியவில்லை. அஸ்வினின் சுழலில் சிக்கி ரன் ரேட் கட்டுக்குள் வந்தது.

வெற்றி
ரஹ்மானுல்லா குர்பாஸ் (19), குல்பதின் நயிப் (18), நஜிபுல்லா (11) என வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதன் பின்னர் வந்த கேப்டன் முகமது நபி (35) ரன்களும், கரீம் ஜனாத் (30) ரன்களும் விளாசி விடாப்பிடியாக போராடினர். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில்

அஸ்வினின் கம்பேக்
நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அஸ்வின் இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவருடன் முகமது ஷமி 3 விக்கெட்களும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


Click it and Unblock the Notifications