யார்க்ஷயர், இங்கிலாந்து: ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் ஒரு சூப்பர் "ஷோ மேன்". அதிரடி விளையாட்டுக்கு மட்டுமல்ல சவால்களுக்கும் கூட எப்போதும் தயாராக இருப்பவர்.
தன்னை நம்பி வரும் ரசிகர்களை எப்போதும் ஏமாற்றவதர். இந்த நிலையில் இங்கிலாந்து வந்துள்ள மேக்ஸ்வெல் அங்கு ஒரு "சர்பிரைஸ்" கொடுத்தார் தனது ரசிகர்களுக்கு.
யார்க்ஷயர் அணிக்கும், பேர்ட்ஸ்லி அணிக்கும் இடையிலான ஒரு காட்சி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டிருந்தார் மேக்ஸ்வெல். யார்க்ஷயர் அணிக்காக அவர் ஆடினார்.
மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் வீரர்கள். மைதானத்தில் ஹாயாக ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தார் மேக்ஸ்வெல். அப்போது ஒரு பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி பாய்ந்து வந்தது. அதைப் பார்த்த மேக்ஸ்வெல் ஐஸ்கிரீமையும் விட்டு விடாமல், இன்னொரு கையால் அந்தப் பந்தை டக்கென்று தாவிப் பிடித்தார். இதைப் பார்த்து மைதானத்தில் கூடியிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டி மகிழ்ந்தார்கள்.
பின்னர் இதுகுறித்து மேக்ஸ்வெல் வெளியிட்ட டிவிட்டில், எனது டுவென்டி 20 கேரியரில் இன்று ஒரு அருமையான நாள்.. ஐஸ்கிரீம் கேட்ச் பிடி்ததேன் என்று போட்டிருந்தார் மேக்ஸ்வெல்.