
தவறான முடிவு
ஆனால், தமிழக அணியின் சுதர்சனும், ஜெகதீசனும் இன்று வேறு ஐடியாவில் இருந்தனர். முதலில் ஸ்விங் ஆன பந்துக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்தனர். பிறகு பந்து என்னால் இனி முடியாது என்று ஸ்விங் ஆனதை நிறுத்தி கொண்டது. இதன் பின்னர், ஜெகதீசனும், சுதர்சனும், அருணாச்சல பிரதேச வீரர்கள் தங்கள் வாழ்நாளில் கிடைக்காத தண்டனையை கொடுத்தனர்.

15 சிக்சர்கள்
வீசும் பந்து எல்லாம் பவுண்டரி, சிக்சருக்கு செல்ல ஜெகதீசன், 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார். இந்த இன்னிங்சில் ஜெகதீசன் 25 பவுண்டரிகளையும், 15 சிக்சர்களையும் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று இருந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். இந்த இன்னிங்சில் இதன் மூலம் நடப்பு தொடரில் 6 இன்னிங்சில் விளையாடி ஜெகதீசன் 799 ரன்களை குவித்துள்ளார்.

416 ரன்கள் கூட்டணி
இதில் 5 சதம், 1 அரைசதம் அடங்கும். இதே போன்று சாய் சுதர்சனும் 102 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்களை விளாசினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 416 ரன்களை குவித்தது. இதன் மூலம் உலக அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து பாபா அப்ரஜித், பாபா இந்தரஜித் ஆகியோர் தலா 31 ரன்கள் விளாசினர்.

தமிழக அணி 506 ரன்கள்
இதன் மூலம் தமிழக அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்தது. உலக அளவில் நடைபெற்ற அனைத்து விதமான ஒருநாள் போட்டியில் இதற்கு முன் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தமிழக கிரிக்கெட் அணி உடைத்தது. தமிழக அணி 506 ரன்களுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 498 ரன்களுடன் 2வது இடத்திலும், சர்ரே 496 ரன்களுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து அணி 481 ரன்களுடன் 4வது இடத்திலும், இந்தியா ஏ அணி 458 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications











