
மிரட்டும் வானிலை
சென்சூரியன் மைதானம் எப்போதும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை. அங்கு விளையாடிய 2 டெஸ்டிலும் இந்தியா தோல்வியே சந்தித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் போட்டி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவை விட தற்போது மழை மிரட்டுகிறது.

முதல் நாள் வானிலை
இதனால் சமூக வலைத்தளத்தில் பிரபலமான தமிழ்நாடு வெதர்மேன், தற்போது சென்சூரியன் வானிலை தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதல் நாள் ஆட்டம் அன்று மழை அவ்வப்போது பெய்யும் என்று தெரிவித்தார். இதனால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் நாள் வானிலை
போட்டியின் இரண்டாவது நாள், அதாவது திங்கட்கிழமை கடும் மழை பொழிவு ஏற்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். இதனால் அன்றைய தினம் ஒரு பந்து கூட வீச முடியாமல் ஆட்டம் கைவிடப்பட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டியின் பெரும்பகுதி மழையால் தடைப்பட உள்ளது.

ஆல் கிளியர்
ஆனால், எஞ்சிய 3 நாட்களிலும் வெயில் அடிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை இந்தியா பேட்டிங்கில் சொதப்பினால், மழை இந்தியாவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தியா சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினால் மழை இந்தியாவின் வெற்றிக்கு ஆப்பு வைக்கவும் வாய்ப்புள்ளது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம்
ஆடுகளத்தில் புற்கள் ஒரு அளவு இருப்பதால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்தப் போட்டியில் லட்டு சாப்பிடுவது போல் இருக்கும். காரணம் மழை பெய்யும் சூழலில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் அப்போது பந்து நன்காக ஸ்விங் ஆகும். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் கைகொடுக்காது. ஒருவேளை ஆடுகளம் தொய்வாக இருந்தால் அப்போது சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்க வாய்ப்புள்ளது


Click it and Unblock the Notifications











