
தோல்விக்கான காரணம் என்ன
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 266 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் எடுத்த இந்திய பவுலர்கள், 2வது இன்னிங்ஸில் அதனை செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் அவர் வீச மறந்த பவுலிங் லெந்த் என்று கூறலாம். வாண்டரர்ஸ் களத்தில் வேகப்பந்துவீச்சுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதுவும் எனவே அங்கு பல்வேறு வித்தியாசங்களை பவுலிங்கில் காட்டிருக்க வேண்டும்.

பவுலர்களின் சிறு தவறு
அதாவது 2வது இன்னிங்ஸின் போது இந்திய அணி 240 என்ற குறைந்த இலக்கை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. எனவே இதற்கு அவுட் சைட் ஆஃப் திசையில் பந்துவீசினால் தான் ரன்களை கட்டுப்படுத்தவும் முடியும், விக்கெட் எடுக்கவும் முடியும். ஆனால் இந்திய பவுலர்கள் அதிகப்படியான பந்துகளை ஸ்டம்பிற்கு நேராகவே வீசினர்.

எப்படி நடக்கும்
பிட்ச்-ல் நல்ல ஈரப்பதம் இருந்ததால் நல்ல ஸ்விங்கும் இருக்கும். இந்திய பவுலர்கள் ஆஃப் சைட் திசையில் பவுலிங் வீசியிருந்தால், பந்து வெளியே செல்கிறதா?, உள்ளே வருகிறதா? என்பது தெரியாமல், பேட்ஸ்மேன் அடிக்காமல் விட்டுவிடுவார். அப்படி விடும் ஏதேனும் பந்து உள்ளே ஸ்டம்பில் படலாம். இல்லையென்றால் எட்ஜாகி கேட்ச் ஆகலாம். ஆனால் இதனை யோசிக்காத பும்ரா, ஷமி ஆகியோர் நேராக ஸ்டம்ப் லைனிலேயே பவுலிங் வீசினர்.
Recommended Video

டிராவிட் மீதே அதிருப்தி
நேராக பந்து வருவதை உணர்ந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிதானமாக பவுண்டரிகளுக்கு ரூட் போட்டு அனுப்பி வைத்தனர். இதனால் தான் மிக வேகமாக ரன் ரேட் அதிகரித்ததுக்கும் காரணம். ஒருவேளை இந்த சூழலில் முகமது சிராஜ் இருந்திருந்தால் இந்திய அணிக்கு உதவி இருக்கலாம். ஏனென்றால் சிராஜின் பலமே பந்தை டேர்ன் செய்வது தான். இதனால் இந்த விவரத்தை ராகுல் டிராவிட் வீரர்களுக்கு தெரியபடுத்தியிருக்கலாம் என ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











