
விராட் சேட்டை
விமானத்தில் சென்ற போது, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, பல்வேறு சேட்டைகளை செய்து வந்துள்ளார். ஒவ்வொரு வீரரிடமும் சென்று கலாய்த்து சிரிப்பது, வம்புக்கிழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். வழக்கமாக விராட் கோலி சீரியஸான முகத்துடன் இருக்கும் நிலையில் அவரை ஜாலியாக கண்டது சக வீரர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

வம்பிழுத்த கோலி
விமான பயணத்தின் போது இஷாந்த் சர்மா தனது பையில் இருந்து எதையோ எடுத்துள்ளார். இதனை பார்த்த கோலி, 'உலகம் முழுவதும் சுற்றுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டுவந்துவிட்டார் போல இஷாந்த் பாய் என கிண்டலடித்துள்ளார். இதற்கு பதிலளித்த இஷாந்த், "என்னை கலாய்க்காதே' எனச் சொல்ல அதனை கோலி கேட்கவே இல்லை.

பரவும் வீடியோ
இஷாந்த் சர்மா சிரிக்காதே எனக்கூறியும் கோலி, சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டு சிரிக்கிறார். மேலும் சில வீரர்களையும் விராட் கோலி கலாய்த்து தள்ள பயணம் முழுவதும் ஜாலியாக சென்றுள்ளது. இதுகுறித்த வீடியோயவை கண்ட ரசிகர்கள், கோலியின் உண்மையான குணம் தெரியாமல், அவரை காயப்படுத்திவிட்டார்கள் என பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தென்னாப்பிரிக்க தொடர் முழுவதும் விராட் கோலி பங்கேற்பார் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி எதிர்கொள்ளும் ஒருநாள் போட்டி தொடரிலும் விராட் கோலி விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ம் தேதியன்று தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications