
இந்திய ப்ளேயிங் 11
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா போன்றவர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி மட்டும் 2வது டெஸ்ட் போட்டியின்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே முதல் டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரகானே தலைமையில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. அதில் விளையாடுவதற்காக இளம் வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காத்திருந்த சூர்யகுமார்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலக்கிய கே.எல்.ராகுல் நியூசிலாந்து தொடரில் ஓப்பனிங் ஸ்பாட்டை உறுதி செய்துவிட்டார். அவருடன் சேர்ந்து மயங்க் அகர்வால் களமிறங்குவார் எனத்தெரிகிறது. முதல் விக்கெட்டிற்கு வழக்கம் போல புஜாரா களமிறங்க, விராட் கோலியின் இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் அறிமுகப்படுத்தப்படுவார் எனத் தகவல் வெளியானது. அதன்படி அவர் அணி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே டி20 தொடரின் போது கோலியின் இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார், டெஸ்ட் தொடரிலும் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன.

ஏமாற்றமே மிஞ்சியது
இந்நிலையில் அதற்கு பிசிசிஐ தரப்பு தயாராக இல்லை என்பது போல தெரிகிறது. ஏனென்றால் விராட் கோலியின் இடத்திற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் பெரும்பாலும் சுப்மன் கில்லின் பெயர் இறுதி செய்யப்படலாம். அவருக்கு அடுத்தபடியாக ரகானே, சாஹா என பேட்டிங் வரிசை உள்ளன.
Recommended Video

சிறந்த புள்ளிவிவரம்
இந்தாண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்தால் ஜூலை மாதத்திலேயே ஒருநாள் போட்டியிலும் தடம் பதித்தார். இந்நிலையில் இதே ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாவார் என எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. 31 வயதாகும் சூர்யகுமார் யாதவ், இதுவரை 77 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதம் மற்றும் 26 அரைசதத்துடன் 5,356 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அவரின் சராசரி 44 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications