
சென்னையில் முதன் முதலாக
சென்னையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதன் முறையாக 1934ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் மோதின. அப்போது முதல் இதுவரை சேப்பாக் மைதானத்தில் இவ்விரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 5 வெற்றியும், இங்கிலாந்து 3 வெற்றியும் பதிவு செய்ய, ஒரேயொரு போட்டி மட்டும் டிராவானது. ஆனால், 1985க்கு பிறகு இங்கிலாந்து சென்னையில் வெற்றிப் பெற்றதில்லை.

டபுள் செஞ்சுரி மிஸ்
2016ம் ஆண்டு இங்கிலாந்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், 3-0 என்று தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், சென்னையில் நடந்த கடைசிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தாலும், கொடூரமாக ஆடிய இந்தியா 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சிறப்பாக ஆடிய லோகேஷ் ராகுல் 199 ரன்களில் அவுட்டானார்.

முச்சதம் கண்ட சேப்பாக்
மிடில் ஆர்டரில் இறங்கி மிகச் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 381 பந்துகளில் 303 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததை சென்னை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

இங்கி., படுதோல்வி
ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் ஜடேஜாவின் ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் ஆர்தடாக்ஸ் பவுலிங்கில் சிக்கி சின்னாபின்னமான இங்கி., 207 ரன்களில் மங்கி, இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அடங்கிப் போனது. எனினும், இவையெல்லாம் கடந்த கால சாதனைகள். இவற்றை மீறி ஜோ ரூட் & கோ ஏதாவது அதிசயம், அற்புதத்தை எதிர்வரும் தொடரில் நிகழ்த்துகிறதா என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications