
அரையிறுதி ஆட்டம்
இந்திய அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றில் தரமான ஆட்டங்களை வெளிப்படுத்திவிட்டு வந்துள்ளன. 5 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுடன் மட்டுமே தோல்வியை தழுவியது. எனினும் இன்று முக்கியப்போட்டி என்பதால் ப்ளேயிங் 11ல் ரிஷப் பண்ட் மற்றும் சாஹல் ஆகியோரை கொண்டு வந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித்-க்கு சிக்கல்
இந்நிலையில் இப்போட்டியில் ரோகித்-க்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது போட்டி நடைபெறும் ஓவலில் மைதானத்தில் லீக் சுற்றுக்கு பயன்படுத்திய அதே பிட்ச் தான் (பழைய பிட்ச்) பயன்படுத்தப்படுகிறது. நிறைய போட்டிகள் நடந்திருப்பதால், பிட்ச் அடிவாங்கி மெதுவாக இருக்கும். அதுவும் நேரம் போக போக இன்னும் மெதுவாக ஆகும் என்பதால் பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள்.

என்ன செய்யனும்?
எனவே இங்கு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். மெதுவான இந்த களத்தில் 150 -160 ரன்கள் அடித்தாலே சவாலான இலக்கு தான். ஆனால் இங்கிலாந்து அணியில் 8வது விக்கெட் வரை அதிரடி பேட்டர்கள் உள்ளனர். கடைசி நேரத்தில் கூட வெற்றி பெறும். முதலில் பேட்டிங் செய்தால் எப்படியாவது 180 ரன்கள் வரை அடித்துவிட வேண்டும்.

வெற்றிக்கு என்ன வழி?
இதற்கு பவர் ப்ளேவில் இருந்தே ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி அடித்தளம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, கோலி என நல்ல பலமான வரிசை இருப்பதால் பேட்டிங் தான் இன்றைய போட்டியின் முடிவை தீர்மானிக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications











