இந்திய அணி அறிவிப்பு
முதல் டி20 போட்டி வரும் ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட் வரும் ஜூலை 5ம் தேதியன்று தான் முடிவடைகிறது. எனவே டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரர்களுக்கு முதல் டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரில் விளையாடிய அணியே, இங்கிலாந்துடனான முதல் டி20 போட்டியிலும் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேப்டனாக ரோகித் சர்மா தான் செயல்படவுள்ளார்.
இந்திய படை
ரோகித் சர்மா, இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
மற்ற 2 போட்டிகள்
அடுத்த 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் முதன்மை அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா, ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். அயர்லாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட அறிமுக வீரர்கள் தீபக் ஹூடா, உம்ரான் மாலிக்கிற்கும் இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முழு படை
ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக்