
வீரர்கள்
இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டிக்கு முன்பாக பல இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் மீதம் இருக்கும் வீரர்களை வைத்து புதிய அணியை இந்திய அணி உருவாக்கி உள்ளது. இந்திய அணியில் முழுக்க முழுக்க புதிய பவுலர்கள் இருந்தாலும் கூட பலரும் சிறப்பாக பவுலிங் செய்தனர்.

முதல் இன்னிக்ங்ஸ்
இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் இளம் பவுலிங் படையில் நடராஜன் 3 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட், ஷரத்துல் தாக்கூர் 3 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர்.

விக்கெட்
இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது போல அணியின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. தொடக்கத்தில் ரோஹித் சர்மா அதிரடியாக 44 ரன்கள் எடுத்தார். அதன்பின் வரிசையாக இந்திய அணி வீரர்கள் எல்லோரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்
புஜேரா 25, ரஹானே 37 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். அதன்பின் அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 38 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். இதனால் வரிசையாக இந்திய அணி இன்று அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்திய அணி தற்போது 5 விக்கெட்டிற்கு 171 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


Click it and Unblock the Notifications











