மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான்.
பல நெருக்கடியான போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு கடும் அழுத்தத்தை பும்ரா கொடுத்தார். 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலை இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் இருந்தது. அப்போது பும்ரா சிறப்பாக இரண்டு ஓவர்கள் வீசி தென்னாப்பிரிக்காவை திணற வைத்தார்.
