For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் வீரர்களின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி…? உச்சக்கட்ட பாதுகாப்பு

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது.

Terrorists may attack players in mumbai, security agencies on high alert

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக சில உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன. குறிப்பாக, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதனால், கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், அதற்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, இந்தியாவில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.

Story first published: Friday, April 12, 2019, 20:58 [IST]
Other articles published on Apr 12, 2019
English summary
Terrorists may attack players in Mumbai, security agencies on high alert.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+