துபாய் : ஆசிய கோப்பை தொடரில் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் இரண்டாவது ஓவரை சுரங்கா லக்மல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட தமீம் இக்பால் புல் ஷாட் ஆட முயன்ற போது பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது.
