
மூத்த வீரர்கள்
இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு இடையில் மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. பல மாதங்களாக இவர்களுக்கு இடையில் பிரச்சனை இருப்பதாக செய்திகள் வருகிறது.

இந்திய கேப்டன்
யார் இந்திய அணியின் கேப்டன் என்பது தொடர்பாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியதாக கூறப்பட்டது. அதன்பின் பிசிசிஐ அதிகாரிகள் இவர்களுக்கு இடையில் வீடியோ கால் செய்தனர். இதன் மூலம் இவர்களுக்கு இடையில் சமாதானம் பேசப்பட்டது.

பேசுவது இல்லை
அதன்பின் இந்திய அணி என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் ஒன்றாக களமிறங்கி ஆடி வருகிறார்கள். மைதானத்தில் பெரிய அளவில் இவர்கள் பேசிக்கொள்வது இல்லை. இருவரும் ஒன்றாக பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்யவும் இல்லை.
வைரல்
இந்த நிலையில் நேற்று போட்டிக்கு பின் இவர்கள் செய்த காரியம் வைரலாகி வருகிறது. போட்டிக்கு பின் ரோஹித் கோலியை கட்டிபிடிக்க செல்லும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளனர். கட்டிப்பிடிப்பதா, கை கொடுப்பதா என்று தெரியாமல் குழம்பி உள்ளனர்.
பிசிசிஐ
பிசிசிஐ வீடியோவில் இது அப்பட்டமாக தெரிகிறது. சண்டை போட்ட இரண்டு பேர் விருப்பமே இன்றி கை கொடுப்பது போல இவர்கள் கை கொடுத்து கொண்டனர். இதை நெட்டிசன்களும் குறிப்பிட்டுள்ளனர். இருவரும் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்தாலே தெரிகிறது.
நண்பர்கள் இல்லை
இவர்கள் இருவரும் நண்பர்கள் இல்லை. இந்திய அணிக்காக மட்டுமே இவர்கள் ஆடுகிறார்கள். அதை தவிர வேறு எதுவும் இல்லை.முன்னாள் காதலர்கள் கூட இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications