
விழிப்பு...
வழக்கம்போல் என்னுடைய உடல் கடிகார நேரத்தின் படி காலை 6.50 மணிக்கு கண் விழித்தேன்.

ஓய்வு நினைவு....
விரைவாகக் குளித்து விட்டு கிரிக்கெட் மேட்சிற்குத் தயாராகவேண்டும். ஆனால் உடனே என் நினைவுக்கு வந்தது ஓய்வுபெற்றது.

தேனீர் தயாரித்தேன்....
உடனே நான் எனக்கான தேநீரைத் தயார் செய்து கொண்டேன். பிறகு மனைவி அஞ்சலியுடன் ஒரு அருமையான காலை உணவு.

ரிலாக்ஸ்...
இந்த நாள் காலை மிகவும் ரிலாக்ஸ்டாக அமைந்தது. நிறைய பேர் எனக்கு வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். அவர்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.களுக்கு பதில் அனுப்பினேன்.

ஆதரவு....
24 ஆண்டுகளுக்கு அவர்கள் கொடுத்த ஆதரவினால்தான் நான் இப்போது உங்கள் முன்னால் இத்தகைய பெருமையுடன் இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications