மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தனது சதத்தை அடித்துள்ளார். இதன்மூலம் இந்தியா சிறப்பான முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ரஹானேவின் இந்த சதம் மிகவும் முக்கியமானது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 36 ரன்களில் சுருண்டது. இந்த சொற்ப ரன்கள் இந்தியாவின் திறனை கேள்விக்குள்ளாக்கியது. இந்நிலையில் தற்போது இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரஹானே சதமடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ரஹானேவின் இந்த சதம் மிகவும் முக்கியமானது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் 36 ரன்களில் இந்தியா சுருண்ட நிலையில், தங்களை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது என்ற மெசேஜை ரஹானேவின் இந்த சதம் எதிரணியினருக்கு கொடுத்துள்ளதாகவும் கவாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.