சிறப்பான ஆட்டம்
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமையான பந்துவீச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுக்குகுள் ஒரு கெமிஸ்ட்ரி இருப்பதை எல்லாராலும் பார்க்க முடிகிறது.
பெருமிதம் தெரிவிக்கும் கோலி
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் அவர்களுக்குள் எந்தவித பொறாமை உணர்வும் இல்லை என்றும் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
பௌலர்களின் வலிமை
தங்களுக்குள் பொறாமை இன்றி வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்படுவதே அவர்களின் பலம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒன்றாக இணைந்தால் அவர்கள் மற்றவர்களையும் தொடர்ந்து சிரிக்க வைத்து விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிக அடி கொடுப்பது பும்ரா
மூத்த பந்து விச்சாளராக உள்ள இஷாந்த் ஷர்மா தான் மற்றவர்களின் கேலி மற்றும் கிண்டல்களுக்கு அதிகமாக ஆளாவார் என்று குறிப்பிட்டுள்ள கோலி, ஊமை குசும்பன் போல அதிகமாக பேசாத ஜஸ்பிரீத் பும்ரா, சரியான நேரத்தில் காலை வாரி விடுவார் என்றும், புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் அவருடன் சேர்ந்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.