ஒருநாள் சர்வதேச தொடர்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விசாகப்படடினத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளன.
கட்டாக்கில் 22ம் தேதி நடைபெறுகிறது
இந்நிலையில் தொடரை இறுதி செய்யும் 3வது போட்டி கட்டாக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.
சக வீரர்களுடன் உற்சாக கொண்டாட்டம்
3வது சர்வதேச ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், கேப்டன் விராட் கோலி, சக வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல், கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சஹால், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோருடன் ஒருநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
|
தேவைப்படும் உற்சாகம்
இந்த கொண்டாட்டம் குறித்து புகைப்படங்களுடன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, இந்த கொண்டாட்டம் தற்போது தங்களுக்கு தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி...
ஐபிஎல் 2020க்கான ஏலம் ஒருபுறம் விறுவிறுப்புடன் நடந்து முடிந்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவற்றை கொண்டாடும்வகையில் விராட், சக வீரர்களுடன் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.